Monday, December 9, 2013

Only one Muslim MLA in MP assembly , no Muslim MLA in Chattishgarh

Bhopal, Nov 9: Arif Aqeel , the Congress candidate from Bhopal North is the only MLA who got elected in Madhya Predesh assembly poll.Arif Aqeel, the sitting MLA  of Congress defeated Arif Baig,  Bharatiya Janata Party’s lone Muslim candidate in the state .
Two another Muslim candidate of Congree lost to BJP.
Kadpa MO Yusuf, the Congress candidate from Jaora Assembly lost to  Rajendra Pandey of  Bharatiya Janata Party, while Feroz Ahmad, who was also a Congress Candidate from Mudwara was defeated by Sandip Shriprasad Jaiswal of BJP.
The only Muslim candidate from Chattishgarh, Akbar Bhai  who fought from Kawardha assembly lost to BJP candidate Ashok Sahu.

தகுதியானவரா மோடி?

 ரு தரப்புக்கு மோடி பிரதமராவது இறைவனின் சித்தம்; மறுதரப்புக்கோ மோடி ஒரு சாத்தான்.

மோடி பிரதமராகவே கூடாது என நினைப்பவர்களின் குற்றச்சாட்டுகள் பரவலாக அறியப்பட்டவைதான். கோத்ரா ரயில் எரிப்பு மரணங்களை அவர் கையாண்ட விதம், குஜராத் படுகொலை, என்கவுன்டர் கொலைகள், அவரது பாஸிச அணுகுமுறை எனப் பல. இக்குற்றச்சாட்டுகள் உண்மையெனில் மோடி நிச்சயம் பிரதமராகத் தகுதியானவர் அல்ல. ஆனால், இக்குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும் அவை முக்கியமல்ல, 'வளர்ச்சிப் பாதையில்' இந்தியாவை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் அவருடைய திறனே முக்கியமானது என்று ஒரு கூட்டம் நினைக்கிறது.

கட்டுப்பாடற்ற வளர்ச்சியைவிட சமூக ஒருங்கிணைப்பே முக்கியமானது. வளர்ச்சி என்பது மனிதனின் மேம்பாட்டுக்குத்தான். மனித உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லாத சமூகத்தில் வளர்ச்சி எலும்புக்கூடுகளுக்குத்தான் பயன்படும்.

சுதேசி கொள்கையுடைய ஆர்எஸ்எஸின் சேவகர் ஒருவர் வளர்ச்சிப் பாதையில் தீவிரவாதியாகச் செயல்பட்டு கார்ப்பரேட்டுகளின் கனவுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரைப் பல எதிர்ப்புகளையும் மீறிப் பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இது வலதுசாரிகளின் கவனத்திற்குரிய முரண்பாடு.

மதச் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும்; அதேபோல, வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே வரும் பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றவர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இந்தியா 'வல்லரசு' ஆக வேண்டும்; அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இக்கருத்துகளை இவர்கள் பொது இடத்தில் பச்சையாக முன்வைப்பது அரிது.

சந்தையில் அடித்ததற்கும் நீதிமன்றத்தில் சாட்சி வேண்டும். எனவே சமூக உண்மை பல சமயங்களில் நீதிமன்ற உண்மையாக இருப்பதில்லை. ஒரு பேச்சுக்காக மோடி அப்பாவி என்று கொள்வோம்.

அப்படியெனில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அவருக்குத் திறன் இல்லை, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை அவருக்குக் கையாளத் தெரியவில்லை, இந்தியச் சட்ட அமைப்பு முன்வைக்கும் ஒரு முதல்வரின் முக்கியக் கடமைகளான பொது மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாத்தல், சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை, தனது காவல் அதிகாரிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது அவருக்குத் தெரியவில்லை, எல்லாவற்றுக்கும் மேல் பல ஆண்டுகளான பின்னரும் உண்மையை விசாரித்தறிந்து நீதியை நிலை நாட்டவும் முடியவில்லை என்றே பொருள்படும். எனவே மோடி அப்பாவி என்று நினைத்தால்கூட பிரதமராகும் தகுதி அவருக்கு இல்லை.

மோடியின் போர் வாளாக அறியப்படும் அமித் ஷாவுக்கு உத்தரப்பிரதேசத்தின் பாஜக கட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்னர் அங்கு இந்துத்துவவாதிகளின் போக்கு தீவிரமடைந்துள்ளது. மதக் கலவரங்களும் படுகொலைகளும் பரவிவருகின்றன. மதவாதத் தீயை பாஜக அரசியல்வாதிகள் பரப்பினார்கள் என்பதும் சமாஜ வாதிக் கட்சியும் அரசும் நிர்வாகமும் அதற்கு உடந்தையாக இருந்தன என்பதும் ஊடகங்களால் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சொல்வதுபோல மோடியின் பாதையில் குஜராத் கலவரம் ஒரு விதிவிலக்கல்ல, அதுவே தில்லிக்குச் செல்லும் அவர் செயல்முறை என்பதையே இவை காட்டுகின்றன.
எப்படிப் பார்த்தாலும் மோடி இந்தியாவுக்கு ஒரு பெரும் பிறழ்வாகவே இருப்பார்!
கண்ணன் 
நன்றி: தி இந்து

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…


டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது டெல்லி தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே இருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தழுவியிருக்கும் தோல்வியின் அளவு அந்தக் கட்சிக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். மக்களுக்கு ஆளும் கட்சி மீது ஏற்படும் வழக்கமான அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட தோல்வியாக காங்கிரஸின் இந்த இரண்டு மாநிலங்களின் தோல்வியைக் கருத முடியாது.

ராஜஸ்தானின் 2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளில் 96 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 25 இடங்களைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை என்பதும், டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதியில் 2008-ல் 43 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 8 இடங்களை மட்டுமே பெறுவது என்பதும், 2014-க் கான மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

சத்தீஸ்கர் ஆறுதல்

மத்தியப் பிரதேசத்திலும் படுதோல்வி என்றாலும் 2008-ல் பெற்ற இடங்களைவிடக் குறைவு என்றாலும் 2008 தோல்விக்கும் 2013 தோல்விக்கும் இடையில் அதிக வித்தியாசமில்லை. காங்கிரஸுக்குச் சற்று, சற்று மட்டுமே ஆறுதல் தரும் விஷயமாக இருப்பது சத்தீஸ்கர் தேர்தல் முடிவு மட்டுமே. 2008 தேர்தலைவிட இப்போது காங்கிரஸ் கூடுதலாகப் பெற முடிந்தபோதிலும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பின்னரே தெளிவுபடும்.

இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு குறிப்பாக, ராகுல் காந்தியின் தலைமைக்குக் கிடைத்த பெருத்த அடி என்றாலும், அது பா.ஜ.க-வுக்கும் நரேந்திர மோடிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துவிடவில்லை. குறிப்பாக, மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கொண்டாட முடியாது என்பதை பா.ஜ.க. தலைவர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
நாடெங்கும் ‘மோடி அலை’ வீசுவதாக சங் பரிவாரமும் மோடி ஆதரவு ஊடகங்களும் கடந்த ஓராண்டு காலமாகக் கூறிவந்த நிலையில், இந்தத் தேர்தலில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான். முக்கியமாக டெல்லி தேர்தல், ‘மோடி அலை எப்படியிருந்தது என்பதற்கான ஓர் உரைகல். மோடி அலை என்று சொல்லப்படுவதே நகர்ப்புற, படித்த, நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் செல்வாக்கைத்தான். அது டெல்லி தேர்தலில் இல்லை என்பது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சிகரமான செய்திதான். மக்களுக்கு ஒரு நல்ல மாற்று கிடைக்குமெனில், வழக்கமாக தாங்கள் அளிக்கும் வாக்குகளை மாற்றியளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே ஆம் ஆத்மி கட்சியின் பெரும் வெற்றி காட்டுகிறது.

ஓராண்டில் பெறுவெற்றி

மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான வாக்கு வங்கி ஏதுமில்லாமல், ஆட்சிமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஓராண்டுகூட ஆகாத ஒரு கட்சி, இத்தகைய மகத்தான வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைத் தவிர்த்து வேறு யாரும் எதிர்பார்க்கவில்லை.

டெல்லி தேர்தலுக்கான பா.ஜ.க-வின் விளம்பரங்களில் தங்களது முதல்வர் வேட்பாளரான ஹர்ஷவர்த்தனின் படம் அஞ்சல்தலை அளவுக்கும் மோடியின் ஆளுயரப் படம் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன. பா.ஜ.க. எந்த அளவுக்குத் தங்கள் வெற்றிக்கு ‘மோடி அலை’யை நம்பியிருக்கிறது என்பதற்கு இதுவோர் உதாரணம்.

மோடியின் தீவிரமான பிரச்சாரத்துக்குப் பிறகும், சில வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக காலங்காலமாக பா.ஜ.க. வலுவாக இருக்கும் டெல்லியில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கே பா.ஜ.க. திணற வேண்டிய நிலை. மலைக்கவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸுக்கு எதிராக ஒரு பெரும் அலை வீசிய போதிலும், மோடியின் தீவிரமான பிரச்சாரம்கூட பா.ஜ.க. பெரும் வெற்றி பெற உதவவில்லை.

வேண்டாம் காங்கிரஸ் ஆதரவு

ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறாவிட்டாலும் வாக்குவிகிதத்திலும் சரி, வெற்றி பெற்ற இடங்களிலும் சரி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் பட்சத்தில் தாங்கள் ஆட்சியமைக்க முடியும் என்றாலும் (அதற்கு காங்கிரஸும் தயாராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை) அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாகக் கூறிவிட்டது.

ஆனால், அ.ஆ.க-வின் இந்த வெற்றி அகில இந்திய அளவிலோ அல்லது பிற மாநகரங்களிலோகூட சாத்தியமில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விவாதிக்க இங்கு இடமில்லை. வரும் 2014 மக்களவைத் தேர்தலில் அ.ஆ.க-வின் வெற்றி டெல்லியில் இதைப் போலவே இருக்குமா என்பதும் உறுதியானது அல்ல. ஆ.ஆ.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் ஊழல் எதிர்ப்பு வாக்குகள். டெல்லியில் ஆ.ஆ.க. ஆட்சியமைக்க வாய்ப்புகள் அதிகம் என அந்தக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தனர். அகில இந்திய அளவில் என்று வருகிறபோது அந்த வாய்ப்பு பா.ஜ.க-வுக்கே இருக்கிறது என்பதால், இப்போது ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கக் கூடும்.

மோடிக்கு சவால் இவர்கள்

மத்தியப் பிரதேசத்தில் மூன்றாம் முறையாக சிவராஜ் சிங் சௌகான் பெரும் வெற்றி பெற்றிருப்பது, சத்தீஸ்கரில் மூன்றாம் முறையாக காங்கிரஸைவிட ஒரு இடம் அதிகமாகப் பெறும் நிலையில் ரமண் சிங் இருப்பது, இப்போதைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்கள் மோடிக்குச் சவாலாக வரும் வாய்ப்புண்டு.

வரும் மக்களவைத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. பெற முடியாது போய், ஆட்சியமைக்கப் பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டி வந்தால், அப்போது பா.ஜ.க-வில் மோடிக்கு மாற்றாக அமையக் கூடியவர் சௌகானாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆக, காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக இந்திரா காந்தி உருவானதைப் போல் பா.ஜ.க-வின் தன்னிகரற்ற தலைவராக மோடி உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு.

தாக்குதல் அனுதாபம்

சத்தீஸ்கர் தவிர்த்த, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைமையே. சத்தீஸ்கரில் பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அந்தக் கட்சிக்கு ஓரளவு உதவியிருக்கிறது. பழங்குடி மக்கள் பகுதியில் நடந்த அதிக அளவிலான வாக்குப் பதிவு மற்றும் அந்தப் பகுதியில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள அதிக இடங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்துள்ளதையே காட்டுகிறது.
மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படுவதும், அளவு கடந்த ஊழலும் அந்தக் கட்சியை மேலும் மேலும் அழிவுநிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தோல்வியைப் பற்றி, ஊடகவியலாளர்களிடம் பேசிய ராகுல் ஆ.ஆ.க-விடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறார். அப்படி கற்றுக்கொண்டால் காங்கிரஸின் மற்றும் அவரின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது.

இடதுசாரிகளின் அரசியல் உத்தி

ஆ.ஆ.க-வின் வெற்றி யாருக்குப் பாடமோஇல்லையோ இடதுசாரிக் கட்சிகளுக்கு முக்கியமான பாடம். பொருளாதாரக் கொள்கைகளில் தங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட, அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் வாக்கு வங்கிகளுக்காக மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டுவைப்பதன் மூலம் இந்தியாவில் தாங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பெரும்பான்மையான மக்களைத் தங்கள் பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற இடதுசாரிகளின் அரசியல் உத்தி, கடந்த 60 ஆண்டுகளில் எந்தப் பலனையும் தந்திருக்கவில்லை.

தங்களது கொள்கைகளின் அடிப்படையில், தங்களை மாற்றாக மக்கள் முன் நிறுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை அவர்கள் வென்றெடுக்க முடியும். இடதுசாரிக் கட்சிகளின் நீடித்த இருப்பு உடனடித் தேர்தல் வெற்றிகளைப் பொருத்ததல்ல என்பதால், இதை இடதுசாரிகளால் சாதிக்க முடியும். மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், பொது வாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை ஆகிய விஷயங்களில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிகள் டெல்லியில் ஆ.ஆ.க. சாதித்ததை அகில இந்திய அளவில் சாதிக்க முடியும். 
தி ஹிந்து
__._,_.___

இந்திய முதல் பெண் மணிகள்...

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.


இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.


இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்). 


இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்). 

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி. 

இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலர்… லட்சுமி பிரானேஷ். 

இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்… விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).


இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்… ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை). 


இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்… ரெஜினா குகா (1922). 


இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்… ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்). 


இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்… லலிதா (சிவில் 1950). 


இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி… அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950). 

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி… கிரண்பேடி.

இந்தியாவின் முதல் பெண் நீதிபதி… அன்னா சாண்டி. 

இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்… சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை). 


இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி… காப்டன் துர்கா பானர்ஜி. 

இந்தியாவின் முதல் பெண் மேயர்… தாரா செரியன். 


இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்… அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்). 


இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்…வசந்த குமாரி (தமிழ்நாடு).

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி… கல்பனா சாவ்லா. 

இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்… சுரோகா யாதவ். 

இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)… இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. 

இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்.... புனிதா அரோரா.] 

இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்… பத்மாவதி பந்தோபாத்யாயா

Wednesday, December 14, 2011

ஈரானால் பிடிக்கப்பட்ட விமானத்தை பார்வையிட

ஈரானால் பிடிக்கப்பட்ட விமானத்தை பார்வையிட சொடுக்கவும்



ஈரான் கைப்பற்றியுள்ள உளவு விமானம், தம்முடையதுதான் என்ற உண்மையை செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் மிகத் துல்லியமான, அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் இழந்திருக்கிறது அமெரிக்கா விமானம் தற்போது ஈரானிய ராணுவத்தின் வசம் உள்ளது. சி.ஐ.ஏ. உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கா இழந்துள்ள RQ-170 மாடல் விமானம், வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ. ரகசியமாக உபயோகித்த விமானம். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த கம்பவுண்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே.

இந்த விமானத்தில் இருந்து கிடைத்த லைவ் வீடியோ ட்ரான்ஸ்மிஷனை வைத்தே, பின்லேடனின் நடமாட்டம் அந்த கம்பவுண்டுக்குள் உள்ளது என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்து கொண்டது. பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரே, அந்த ஆபரேஷனுக்கு RQ-170 உளவு விமானம் உபயோகிக்கப்பட்ட தகவலை சி.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது.



சி.ஐ.ஏ.-க்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதை சி.ஐ.ஏ. அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். RQ-170 விமானம் சி.ஐ.ஏ.-க்கு மிக முக்கியமானது என்ற வகையில் அதன் இருப்பு பற்றியே சி.ஐ.ஏ. ரகசியம் காத்து வந்தது. நீண்டகாலமாக இந்த விமானத்தின் போட்டோக்கள்கூட வெளியே செல்லாதபடி பார்த்துக் கொண்டது. (இன்றுகூட வெளியே உலாவும் போட்டோக்களில் பெரும்பாலானவை கிராபிக் அனிமேஷன்கள். மிகச்சிலவே நிஜமான போட்டோக்கள்!)
RQ-170 தமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்தபோது கைப்பற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விமானம் தம்முடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானம் ஈரானிய வான்பரப்பில் பறந்ததா என்பதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர். விமானம் கைப்பற்றப்பட்ட தினத்தில் சி.ஐ.ஏ.-யின் ஆபரேஷன் ஒன்றுக்காகவா பறக்க விடப்பட்டது என்ற கேள்விக்கு பென்டகன் பேச்சாளர் ஜோர்ஜ் லிட்டல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

தமது நாட்டு அணு ஆலைகளை உளவு பார்க்கவே விமானம் பறந்ததாக கூறுகின்றது ஈரான்.

இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சிக்னல்களை சி.ஐ.ஏ. ஏற்படுத்தியதாகவும், அந்த சிக்னல்களின்படி விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அதன்படி விமானம் ஆப்கானுக்கு மேலாக இருப்பதாக மற்றையவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ஆக்சுவல் விமானம் ஈரானிய வான்பரப்பில் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

இரு தினங்களுக்குமுன் (ஞாயிற்றுக்கிழமை) ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப் (International Security Assistance Force), இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது. மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த RQ-170, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது.

விமானம் ஈரானிடம் இழக்கப்பட்டதையோ, அது ஈரானிய வான்பரப்பில் பறக்க விடப்பட்டதையோ மறைக்கவே, ஐ.எஸ்.ஏ.எஃப் செய்திக் குறிப்பில் இந்த செய்தி இணைக்கப்பட்டதாக இப்போது ஊகிக்கிறார்கள். காரணம், RQ-170 ஆபரேஷன்கள் ரகசியமானவை. அவை பற்றிய விபரங்கள் ராணுவ செய்திக் குறிப்புகளில் வெளியாவதில்லை.

இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம்வரை மர்மமாகவே உள்ளது.




விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்




"நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது' என, ஈரானின் புரட்சிப் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.தொடர்ந்து கடந்த 8ம் தேதி, அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார்வையிடும் வீடியோவையும் வெளியிட்டது.



இந்நிலையில், ஈரானின் புரட்சிப் படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது, போரைத் தூண்டும் நடவடிக்கை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை' என தெரிவித்தார்.ஆர்.க்யூ.,-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள், அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணினி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.ஆனால், எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி,

Monday, December 5, 2011

December 6

டிசம்பர் 6

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார்.

Sunday, September 11, 2011

Who Is Immanuvel Sekaran


Immanuvel Devendrar (also called Immanuvel sekaran) was a freedom fighter and a social reformer. He also worked in the Indian army as 'Havaldar major'. He belongs to Devendra kula vellalar caste. He was murdered on 11 september 1957. His postal stamp was released by the government of India in 2010. is death anniversary day is attended by millions of people in Tamilnadu every year.

Personal life

Immanuvel devendrar was born on 9th october 1924 to Mr.Vedhanayagam (School Teacher and founder of Devendra kula vellalar sangam,Mudukulathur) and Mrs.Gnanasoundhari Ammal in a village of Sellur, which is located in Mudukulathur Taluk in Ramanathapuram district,Tamil Nadu . He has four childrens namely E.Mary Vasantha rani,E.papin vijaya rani,E sundari prabha rani, E.Jansi rani. Immanuvel sekaran knew 7 languages including Russian language.

At the age of 18 Immanuvel devendrar participated in the Quit India movement and he was imprisoned for three months by the British Government.

In 1945 he joined the Indian army as 'Havaldar major'. He worked in the Indian army until he returned to Paramakudi to become a youth congress leader.

He worked hard for the upliftment of the Scheduled caste people in Tamilnadu. During his work as a social reformer he was murdered following the 1957 riots.